முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Wednesday, August 26, 2009

தொல்காப்பிய வகுப்பு 3

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,

வணக்கம்.

1) கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தொல்காப்பிய வகுப்பு 3 எதிர்வரும் 28, 29 செப்டம்பர் 2009 ஆகிய இரு தினங்களுக்கு மாநிலக் கல்வி இலாகாவின் ஒத்துழைப்போடு நடைபெறவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் விவரங்கள் பின்வருமாறு:

நாள் : 28, 29 செப்டம்பர் 2009
Tarikh : 28, 29 September 2009 (Isnin, Selasa)

இடம்:
மாநிலக் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு,
ஸ்கூடாய்
Tempat:
Bahagian Teknologi Pendidikan
Negeri, Taman Skudai Baru, Skudai, Johor

நேரம் :
காலை 8.30 (28.09.2009) முதல்
பிற்பகல் 1.00 (29.09.2009) வரை
Masa :
Bermula 8.30 pagi (28.09.2009)
hingga 1..00 tengahari (29.09.2009)


கடந்த வகுப்பில் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வகுப்பில் எளிய முறையிலான தேர்வு ஒன்று நடைபெற உள்ளது என்பதனையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தயார் நிலையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஆகியவற்றின் ஒலிப்பதிவும் குறிப்புகளும் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் (0127116058) அவர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். குறுவட்டின் (CD) விலை ரி.ம. 5 , அஞ்சல் செலவு ரி.ம. 2 மட்டும். வகுப்பு 2-இல் கலந்து கொள்ள இயலாதவர்கள் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி.

Tuesday, August 25, 2009

தொல்காப்பிய வகுப்பு 2 (09.08.2009)













தொடர்ந்து தொல்காப்பிய வகுப்பு 2 கடந்த 09.08.2009 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதன் ஒளிப்படங்கள் இங்கே.

தொல்காப்பிய வகுப்பு 1 (29.6.2009)
















வகுப்பில் கலந்து பயன்பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள்

ஏற்பாடுக்குழுத்தலைவர் திரு. ஞா. வேதநாயகம், வகுப்பு நடத்துநர் மூதறிஞர், உங்கள் குரல் இதழாசிரியர் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள், ஜோகூர் மாநிலக் கல்வித்துறைத் துணை இயக்குநர் திரு. இரா.விஜயன் அவர்கள்

தலைமையுரை: கழகத்தின் தலைவர் திரு. ந.தமிழ்வாணன்
நமது கழகம் கடந்த 29.06.2009 திங்கட்கிழமையன்று (ஆட்சியாளர் நினைவுநாள் பொதுவிடுமுறை - Cuti Umum Hari HOL Negeri Johor) குளுவாங் மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பில் மாநிலத்தின் இடைநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், தமிழார்வாலர்கள் என 63 பேர் கலந்து பயன்பெற்றனர்.

கழகம் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஒளிப்படங்கள்